முழு முதற்கடவுள் விநாயகரை வணங்கி எந்தவொரு காரியத்தையும் தொடங்குவது இந்துக்களின் பழக்கமாகும். அப்பேற்பட்ட விநாயகப் பெருமான் அருள்களை வாரி வழங்குபவர். அனைத்து ஆலயங்களிலும் குடிகொண்டிருப்பவர்.
சங்கடஹர சதுர்த்தி:
ஆதிசிவன் – பார்வதி தேவியின் மூத்த மகனாகவும், முருகப்பெருமானின் அண்ணனுமாகிய விநாயகப் பெருமானை நினைத்து தொடங்கும் காரியம் ஜெயத்தில் முடியும் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அப்பேற்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி. நவம்பர் 1-ந் தேதியான இன்று சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி உள்பட விநாயகருக்கு உகந்த நாட்களில் அவருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், அவல், பொரி கடலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், விநாயகருக்கு மேலும் பிடித்த 5 விஷயங்களை பற்றி கீழே காணலாம்.
1. லட்டு:
சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு லட்டு வைத்து வழிபடுவதும் சிறந்தது ஆகும்.
2. பாயாசம்:
அரிசி, தேங்காய், நெய் மற்றும் இனிப்பு கலந்து செய்யும் பாயாசம் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மேலும், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பாயாசம் வைத்து விநாயகரை வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.
3. வாழைப்பழம்:
பொதுவாக வீட்டில் நடக்கும் எந்த ஒரு வழிபாட்டிலும் வாழைப்பழம் இல்லாமல் நடக்காது. சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மற்ற பழங்களை போலவே வாழைப்பழத்தையும் வைத்து வழிபட்டால் சிறப்பாக கருதப்படும்.
4. சாமந்தி பூ:
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த பூக்களில் ஒன்று சாமந்தி பூ. அவருக்கு உகந்த நாளான இன்று சாமந்தி பூ வைத்து அவரை வழிபட்டால் வீட்டில் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.
5. அருகம்புல்:
விநாயகர் வழிபாடு என்றாலே அருகம்புல் இல்லாமல் நிறைவடையாது. விநாயகப் பெருமானுக்கு இன்று நீங்கள் செய்யும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் அருகம்புல் இடம்பிடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். அருகம்புல் நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது ஆகும்.
விநாயகருக்கு மிகவும் உகந்த நாளான இன்று சங்கடஹர சதுர்த்தி பூஜையை சிறப்பாக கொண்டாடி விநாயகரின் அருளைப் பெறுங்கள்.













