தமிழ் திரையுலகம் உள்பட இந்திய திரையுலகம் சமீபகாலமாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் இணையத்தில் திரைப்படம் லீக் ஆவதே ஆகும். படம் ரிலீசாகும் தினத்திலே திரைப்படம் இணையத்தில் வெளியாவது படக்குழுவிற்கும், தயாரிப்பாளருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு குட் பேட் அக்லி படமும் விதிவிலக்கு அல்ல.
குட் பேட் அக்லிக்கு இப்படி ஒரு நிலையா?
ஆனால், குட் பேட் அக்லி படம் மிகவும் வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி படம் தணிக்கை குழுவிற்காக அனுப்பப்பட்ட படத்தை சில விஷமிகள் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். அதுவும் திரையரங்கில் வெளியான படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், பாடல் காட்சிகள், சில காட்சிகளுக்கு பதிலாக வேறு வசனங்கள், உண்மையான குரலுக்கு பதிலாக வேறு சிலர் டப்பிங் அளித்துள்ளனர்.
வழக்கமாக, ஹாலிவுட் படங்களின் ரீமேக்கில்தான் இதுபோன்று சிலர் செய்து இணையத்தில் கசியவிடுவார்கள். ஆனால், தற்போது தமிழ் படம் ஒன்றிற்கும் இதுபோல செய்துள்ளனர். அதுவும் உச்சநட்சத்திரமாக உலா வரும் ஒருவரின் திரைப்படத்திற்கு இதுபோன்று செய்திருப்பதுடன், படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை பரப்பும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஷமிகளுக்கு முடிவு இல்லையா?
திரையரங்கில் படத்தை விமர்சனங்களை எப்போதும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இதுபோன்று இணையத்தில் கசியவிடும் திரைப்படத்தை பார்த்தும், அதுவும் இதுபோன்று காட்சிகள் மாற்றப்பட்ட திரைப்படத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களான உச்சநட்சத்திரங்களுக்கு அதிக வெறுப்பாளர்களும் உள்ளனர். இந்த வெறுப்பாளர்களே இதுபோன்ற திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திரைப்படத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகரிக்கும் வசூல்:
தொடர்ந்து திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடும் குட் பேட் அக்லி படம் இதுவரை 150 கோடி ரூபாயை கடந்து வசூலித்துள்ளது. இந்த மாத இறுதிவரை எந்த படமும் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத சூழலில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. பல திரையரங்குகளில் குட் பேட் அக்லி படத்திற்கு கூடுதல் இருக்கைகள் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.














