தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
இதனால், வரும் ஞாயிற்றுக்கிழமை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. பெனோனியில் நடக்கும் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக்கோப்பையை வெல்லும். கடந்தாண்டு நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. அது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது அந்த சோகத்தை துடைப்பதற்கு ஜூனியர்ஸ் அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சீனியர்ஸ் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா சீனியர்ஸ் அணியின், ஜூனியர்ஸ் அணியை வீழ்த்தி அந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளுமே சமபலத்துடன் உள்ளனர் என்பதே உண்மை. இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சம பலத்துடன் உள்ளனர்.
பழதீர்ப்பார்களாக ஜூனியர்ஸ்?
குல்கர்னி, ஆதர்ஷ் சிங், முஷீர்கான், கேப்டன் உதய் சாஹரன், சச்சின் தாஸ் என இந்திய பேட்டிங் பட்டாளமும், ராஜ் லிம்பானி, செளமி பாண்டே என பந்துவீச்சு பட்டாளமும் பலமாக உள்ளது. அரையிறுதியில் கேப்டன் உதய் சாஹரன் – சச்சின் தாஸ் இன்னிங்ஸ் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் பலமாக உள்ளது. நேற்று நடந்த அரையிறுதியில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட் வீழ்த்தினார். ஹாரி டிக்சன், ஆலிவர், டாம் கேம்பால் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். கடந்தாண்டு சீனியர்ஸ் அணி உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு, இந்திய ஜூனியர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.














