தே.மு.தி.க. கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
விஜயகாந்த் மறைவு:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவரது உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
கண்ணீர்கடலில் தமிழ்நாடு
அவரது மறைவு செய்தியறிந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியறிந்து அவுரது வீட்டின் முன்பு அனைவரும் கண்ணீர்மல்க குவியத் தொடங்கியுள்ளனர்.
இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியறிந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் விடத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், அவரது தொண்டர்களும் அவரது மறைவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் உடலுடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்சில் வந்தனர்.














