வீடு என்பது நம் அனைவரின் மிகப்பெரிய கனவாகும். அப்பேற்பட்ட வீட்டை கட்டும்போது நாம் பார்த்து, பார்த்து கட்டுவோம். வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும். வீட்டில் நிம்மதியும், செல்வமும், மகிழ்ச்சியும் எப்போதும் தவழ கீழே உள்ள முறைகளை வாஸ்து முறைப்படி பின்பற்ற வேண்டும்.
1. வாசல்:
வீட்டிற்கு மிக, மிக முக்கியம் வாசல் ஆகும். வீட்டின் நுழைவு வாயில் எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி நேர்மறை எண்ணங்களை ஈர்க்கும் தன்மை நுழைவு வாயில்களுக்கு உள்ளது. அதேபோல, நுழைவுவாயில் வழியாக வீட்டின் உள்ளே வரும் முதல் அறை நன்றாக வெளிச்சமாக இருக்க வேண்டும். நுழைவு வாயில் வைப்பதற்கு சரியான திசை வடக்கு அல்லது கிழக்கு திசை ஆகும்.
2. சூரிய ஒளி:
வீடானது எப்போதும் நல்ல வெளிச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். சூரிய ஒளியானது வீட்டிற்குள் வருவது என்பது மிக மிக முக்கியம் ஆகும். சூரிய வெளிச்சமானது வீட்டை பிரகாசம் ஆக்குவதுடன், நம்மில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது ஆகும்.
3. மீன் தொட்டி:
வீட்டில் மீன் தொட்டி வளர்ப்பது மிகவும் நல்லது என்று வாஸ்துவில் சொல்லப்படுகிறது. பல வண்ண மீன்கள் நிறைந்த மீன் தொட்டியை வளர்ப்பதால் வீட்டில் நேர்மறை நிகழ்வுகளும், எண்ணங்களும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். மீன் தொட்டியை எப்போதும் வரவேற்பு அறை அல்லது வடகிழக்கு திசையில் அல்லது தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
4. பிரமிடு கற்கள்:
வீட்டில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வந்தால் கூழாங்கற்களை கொண்டு பிரமிடு போல ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வீட்டில் அலங்கரிக்கலாம். இந்த வடிவ கூழாங்கற்களுக்கு வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உண்டு.
5. காற்றாடி மணி:
உலோகத்தால் செய்த காற்றாடி மணியை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ள தடைகள் விலகும். இந்த காற்றாடி மணியானது உலோகத்தால் செய்திருந்தால் நல்லது ஆகும். இந்த காற்றாடி மணியானது 6 அல்லது 8 எண்ணிக்கையில் இருப்பது நல்லது ஆகும்.
6. சுத்தம்:
வீட்டை எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் இருக்கும் இடத்தில் எப்போதும் நன்மை இருக்கும். சுத்தமாக இருப்பதால் உடலுக்கும் நன்மை உண்டாகும். மனதிற்கும் நன்மை உண்டாகும்.














