தமிழ்நாடு அரசின் கீழ் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு துறைக்குமான பணியாளர்கள் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
போட்டித் தேர்வுகள்:
சில துறைகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய வேறு சில ஆணையங்களும் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் TNPSC, TRB, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நபர்கள் எழுதி வருகின்றனர். இதற்காக தனியார் பயிற்சி வகுப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பிலும்
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்:
கட்டணமில்லா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.ஆர்.பி. பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பதற்காக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537. மேலே கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண்கள் மூலமாக மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.














