உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நேற்று இந்தியாவில் தொடங்கிவிட்டது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானையும், வங்கதேச அணி இங்கையும் வீழ்த்தியது.
இந்தியா – இங்கிலாந்து:
இந்த நிலையில், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் இன்று மதியம் நடைபெறும் ஆட்டம் பயிற்சி ஆட்டம் என்றாலும் இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித், சுப்மன்கில், கே.எல்.ராகுல், விராட்கோலி, ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்.
அதேபோல, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு நிகரான பலத்தை கொண்டது. கேப்டன் ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், ஜானி பார்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் என அந்த அணியில் கடைசி வீரர் வரை பேட்டிங் ஆடக்கூடியவர்கள்.
அஸ்வின், ஷமி ஆடுவார்களா?
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களது பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். இங்கிலாந்து அணியிலும் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம்கரன், லிவிங்ஸ்டன், ரஷீத் ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர்.
இந்திய அணிக்கு பந்துவீச்சில் பலமாக பும்ரா, சிராஜ், ஷமி உள்ளனர். இன்றைய போட்டியில் ஷமி ஆடுவாரா? தாக்கூர் ஆடுவாரா? என்ற கேள்வி உள்ளது. அதேபோல, அஸ்வினா? குல்தீப் யாதவா? என்ற கேள்வியும் உள்ளது. பயிற்சி ஆட்டம் என்றாலும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.














