இணைய வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புகழ்பெற்று வருகின்றனர். பொதுவாக ஒரு மனிதரை மற்ற மனிதர்களை வசீகரிக்கும் முக்கிய பாகமாக இருப்பது கண்கள். பலரும் தங்களது கண்களுக்காகவே உலகப் புகழ்பெற்றுள்ளனர்.
கண்களால் கட்டிப்போட்ட அழகி:
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் அப்படி ஒரு பெண் தனது கண் அழகிற்காக இந்தியா முழுவதும் புகழ்பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினசரி பங்கேற்று வருகின்றனர்.
இந்த கும்பமேளாவில் ஊசி, பாசிகள் உள்ளிட்ட ஆபரண பொருட்களை விற்பதற்காக ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் மோனலிசா. இவர் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களிடம் ஊசி, பாசி விற்று வந்துள்ளார். அப்போது இவரை கண்ட ஒருவர் அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். மேலும் அவரது கண்களை வர்ணித்து பதிவிட்டிருந்தார்.
ஒரே நாளில் ஃபேமஸ்:
இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. இதையடுத்து, கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் பலரும் அந்த பெண்ணைத் தேடி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுக்க பலரும் கூடினாலும், யாரும் பெரியளவில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், வைரலான அந்த பெண்ணை வைத்து அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் தங்களை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
அந்த பெண்ணை வைத்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பிரபல நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இதனால், ஒரே நாளில் அந்த பெண் பெரும் புகழ் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரைப் பூர்வீகமாக கொண்ட இவருக்கு தற்போதுதான் 16 வயதாகிறது.














