ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதல் முறை சாம்பியனாக துடிக்கும் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இரு அணிகளும் புது கேப்டன் புது வீரர்கள் என புது பட்டாளமாக களமிறங்குகின்றனர். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரங்களை கீழே காணலாம்.
இதுவரை நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 34 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 14 போட்டிகளில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணி 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிகபட்சம், குறைந்தபட்சம்:
ஆர்சிபி அணியின் மோசமான குறைந்தபட்ச ரன்னான 49 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராகவே பெங்களூர் அணி எடுத்தது. கொல்கத்தா அணி பெங்களூர் அணிக்கு எதிராக குறைந்தபட்சமாக 84 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா அணி ஆர்சிபி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 222 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணி கொல்கத்தாவிற்கு எதிராக அதிகபட்சமாக 221 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா எப்படி?
ரஹானே தலைமையில் களமிறங்கும் அணி பேட்டிங், பவுலிங் என பலமாகவே உள்ளது. கேப்டன் ரஹானே மிகுந்த அனுபவம் கொண்டவர். அவருடன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங், பவெல், குர்பாஸ், மணீஷ் பாண்டே பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர்.
கொல்கத்தாவின் பலமாக மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் உள்ளனர். மேலும், ரஸல், மொயின் அலி, ராணா, வைபவ் அரோரா பந்துவீச்சுக்கு பலமாக உள்ளனர்.
ஆர்சிபி எப்படி?
புதிய கேப்டன் இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. ஆர்சிபி அணியின் பலமே விராட் கோலி ஆவார். அவரது பேட்டிங் ஆர்சிபிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பில் சால்ட், லிவிங்ஸ்ட்ன், டிம் டேவிட், ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல் என வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
கேப்டனாக முதன்முறையாக களமிறங்கியுள்ள படிதார் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படு்த்த வேண்டியது அவசியம் ஆகும். குருணல் பாண்ட்யா, மனோஜ், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா பேட்டிங்கில் அசத்தினால் ஆர்சிபி மிகப்பெரிய ரன்களையும் எட்டிப்பிடிக்கும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள், நிகிடி, நுவான் துஷாரா, சுயாஷ் சர்மா, சுவப்னில் சிங், ரஷீக்தார் உள்ளனர்.
இரு அணிகளிலும் பலமிகுந்த வீரர்கள் உள்ள நிலையில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக ஆர்சிபி அணிக்கு ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது மிகப்பெரிய சவால் ஆகும்.
இரு அணிகளும் புது கேப்டன் புது வீரர்கள் என புது பட்டாளமாக களமிறங்குகின்றனர். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரங்களை கீழே காணலாம்.
இதுவரை நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 34 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 14 போட்டிகளில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணி 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிகபட்சம், குறைந்தபட்சம்:
ஆர்சிபி அணியின் மோசமான குறைந்தபட்ச ரன்னான 49 ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராகவே பெங்களூர் அணி எடுத்தது. கொல்கத்தா அணி பெங்களூர் அணிக்கு எதிராக குறைந்தபட்சமாக 84 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா அணி ஆர்சிபி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 222 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணி கொல்கத்தாவிற்கு எதிராக அதிகபட்சமாக 221 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா எப்படி?
ரஹானே தலைமையில் களமிறங்கும் அணி பேட்டிங், பவுலிங் என பலமாகவே உள்ளது. கேப்டன் ரஹானே மிகுந்த அனுபவம் கொண்டவர். அவருடன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங், பவெல், குர்பாஸ், மணீஷ் பாண்டே பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர்.
கொல்கத்தாவின் பலமாக மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் உள்ளனர். மேலும், ரஸல், மொயின் அலி, ராணா, வைபவ் அரோரா பந்துவீச்சுக்கு பலமாக உள்ளனர்.
ஆர்சிபி எப்படி?
புதிய கேப்டன் இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. ஆர்சிபி அணியின் பலமே விராட் கோலி ஆவார். அவரது பேட்டிங் ஆர்சிபிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பில் சால்ட், லிவிங்ஸ்ட்ன், டிம் டேவிட், ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல் என வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
கேப்டனாக முதன்முறையாக களமிறங்கியுள்ள படிதார் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படு்த்த வேண்டியது அவசியம் ஆகும். குருணல் பாண்ட்யா, மனோஜ், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா பேட்டிங்கில் அசத்தினால் ஆர்சிபி மிகப்பெரிய ரன்களையும் எட்டிப்பிடிக்கும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள், நிகிடி, நுவான் துஷாரா, சுயாஷ் சர்மா, சுவப்னில் சிங், ரஷீக்தார் உள்ளனர்.
இரு அணிகளிலும் பலமிகுந்த வீரர்கள் உள்ள நிலையில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக ஆர்சிபி அணிக்கு ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது மிகப்பெரிய சவால் ஆகும்.














