இந்திய கிரிக்கெட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் ரிங்குசிங். ஐ.பி.எல். தொடரில் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது 5 சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் பிரபலமானவர்.
ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்:
அதன் மூலம் இந்திய அணியிலும் இடம்பிடித்து இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத வீரராக இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரான ரிங்குசிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
ரிங்கு சிங் இளம் அரசியல்வாதியான பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள மச்சலி சாகர் தொகுதியில் இருந்து முதன்முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக வெற்றி பெற்றவர்.
யார் இந்த பிரியா சரோஜ்?
உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவரும், 3 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவரும், தற்போது எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் துபானி சரோஜின் மகள் பிரியா சரோஜ் ஆவார். இவர்கள் இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரியா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். 1998ம் ஆண்டு நவம்பர் 23 பிறந்த பிரியா, டெல்லியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். பின்னர், நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கான பட்டம் பெற்றவர்.
இவர்கள் இருவரது திருமண அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது.














