வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் திரு வி க நகர் பகுதி வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி மகளிர் அணி இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மற்றும் மாவட்ட பகுதி கழக நிர்வாகிகள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
பொய் சொல்வதில் ஆஸ்கார்:
“கடந்த 29 மாத திமுக ஆட்சியில் மக்கள் திமுக மீது மிகவும் வெறுப்படைந்துள்ளனர். சொத்துவரி மின்கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வினால் தமிழக மக்கள் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் எப்போது தேர்தல் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்வார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை எந்த புகார் பெட்டியும் வைக்கவில்லை. பொய் மேல் பொய் சொல்லும் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். பொய் மேல் பொய் கூறிவரும் ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என தெரிவித்தார்.
பச்சோந்தி
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்திரா காந்தியை அருவருக்கத்தக்க வகையில் பேசிவிட்டு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து மந்திரி சபையில் இடம்பெற்றது தான் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம் இதே போல் கருணாநிதி உயிரோடு இருக்கும்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிவிட்டு பின்பு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்தாண்டு காலம் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றதும் திமுக தான் பச்சோந்தியை விட மிகவும் கேவலமான சந்தர்ப்பவாத அரசியலை திமுக செய்கிறது சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் திமுக என்றும் பச்சோந்தி விட மோசமானது.
காவிரி நதிநீர் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைக்காக பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்தது புரட்சித்தலைவி அம்மா. கூட்டணி மந்திரி சபையில் இடம்பெறுவதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தது திமுக.”
இவ்வாறு அவர் பேசினார்.













