தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட ஒரு தொலைக்காட்சியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ். 7வது சசீனாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது.
16 லட்சம்:
பல்வேறு சர்சசைகள், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு என பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி, விஷ்ணு உள்ளே இருந்தனர். இந்த நிலையில், பணப்பெட்டி டாஸ்க் வந்தது. இதில், டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பூர்ணிமா யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார்.
பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனபோது யார் அதை எடுப்பார்கள் என்று கேள்வி எழுந்தது. அப்போது, 16 லட்சத்தை பணப்பெட்டி அடைந்தபோது பூர்ணிமா அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார். ஒரு யூ டிபராக இருந்து போட்டியாளராக உள்ளே வந்த பூர்ணிமாவிற்கு ரூபாய் 16 லட்சத்துடன் வெளியேறியிருப்பது சிறந்த செயல்பாடாகவே பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாராட்டும் ரசிகர்கள்:
அதேநேரத்தில் அவரது ஹேட்டர்ஸ் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அவரது ரசிகர்கள் பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறியதால் வருத்தம் அடைந்துள்ளனர். டைட்டில் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு அது வருத்தமாக இருந்தது. சிலர் மாயாவால்தான் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பணப்பெட்டியுடன் மாயா ஆடும் காட்சி, அவரை பிக்பாஸ் சக போட்டியாளர்கள் வழியனுப்பும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அடுத்து இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் டைட்டில் வின்னராக வெளியே வராவிட்டாலும் இதுதான் ஸ்மார்ட் மூவ் என்று பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர்.














