Pongal 2025 Nalla Neram: உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான பொங்கல் வரும் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தைத் திருநாளான அந்த நன்னாளில் புத்தம் புது பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாகும். வரும் 13ம் தேதி எந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்? எந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
சூரிய பொங்கல்:
தைத் திருநாளான அன்று கொண்டாடப்படும் பொங்கலானது உழவுக்கும், உயிருக்கும் ஆதாரமான சூரியனை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால், சூரியன் உதிப்பதற்கு முன்பு பொங்கல் வைக்கத் தொடங்கிய சூரியன் தோன்றும்போது பொங்கல் பொங்கி வருவது போல வைப்பது மிகச்சிறப்பு ஆகும்,
பொங்கல் வைக்க ஏற்ற நேரம்:
சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைக்க இயலாதவர்கள் கீழே குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் வைக்கலாம். உத்தமம், லாபம், அமிர்தம் ஆகிய நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
உத்தமம்:
இந்த உத்தம நேரமானது காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
லாபம்:
லாப நேரத்தில் பொங்கல் வைப்பதும் நல்லது ஆகும். காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வரும் நேரம் லாப நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைப்பதும் சிறப்பு ஆகும்.
அமிர்தம்:
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அமிர்த யோக நேரம் வருகிறது. அந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
பொதுவாக, பொங்கலை மதியம் 12 மணிக்குள் வைத்துவிடுவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் பொங்கல் இந்த அமிர்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
இந்த நேரங்கள் தவிர்த்து சூரிய ஓரை, சுக்கிர ஓரை, குரு ஓரை ஆகிய நேரங்களிலும் பொங்கல் வைக்கலாம்.
சூரிய ஓரை – காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை
சுக்கிர ஓரை – காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை
குரு ஓரை – மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை
எந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாது?
பொங்கல் நன்னாளில் பொங்கல் ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தில் வைக்கக்கூடாது.














