இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
ராகுல் – ஜடேஜா அபாரம்:
முதல் இன்னிங்சில் ஹெட், ஸ்மித் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை நேற்று தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சுப்மன்கில் விராட் கோலி வரிசையாக ஏமாற்றினர். இதையடுத்து, இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மாவும் 10 ரன்களில் அவுட்டாக கே.எல்.ராகுல் – ஜடேஜா நங்கூரம் போல நின்றனர். 74 ரன்களில் ஜோடி சேர்ந்த இவர்கள் 141 ரன்கள் வரை களத்தில் நின்றனர்.
தனி ஆளாக அசராமல் ஆடிய ராகுல் 84 ரன்களில் அடுட்டாக, நிதிஷ் ரேட்டியும் 16 ரன்களில் அவுட்டாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவும் 77 ரன்களுக்கு அவுட்டாக இந்தியா 213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்க 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டாக வந்தார் ஆகாஷ் தீப்.
பாடம் எடுத்த ஆகாஷ் தீப்:
ஆகாஷ் தீப்தானே எளிதில் அவுட்டாக்கிவிடலாம் என்று எண்ணிய கம்மின்ஸ் படைக்கு கண்ணில் விரல் விட்டு ஆட்டினார். ஆகாஷ் தீப். மறுமுனையில் பும்ராவை வைத்துக் கொண்டு ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோரின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தார். குறிப்பாக, இந்திய வீரர்கள் தடுமாறிய ஷார்ட் பிட்ச் பந்துகள், கவர் டிரைவ் பந்துகள், பவுன்சர்களை மிக மிக லாவகமாக எதிர்கொண்டார்.
அவரது ஆட்டத்தை பெவிலியனில் அமர்த்து ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரோகித், கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ரசித்துக் கொண்டிருந்தனர். ரசித்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி அவர் ஆடும் விதத்தைப் பார்த்து கற்றுக் கொணடனர் என்றே சொல்லாம். இந்திய பந்துவீச்சாளர்களின் பலவீனமாக கருதப்பட்டு பந்துகளை எல்லாம் அவர் சிறப்பாக எதிர்கொண்டார்.
கற்றுக்கொள்ள வேண்டும்:
பும்ராவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஓரிரு ரன்களாக ஓடி, ஓடி எடுத்தனர். பின்னர், பவுண்டரி அடித்து பாலோ ஆனையும் தவிர்த்தார் ஆகாஷ் தீப். பும்ரா – ஆகாஷ் தீப் ஜோடி கடைசி விக்கெட்டிற்கு போராடி 31 ரன்களை கடந்து பாலோ ஆனை கடந்தது. பாலோ ஆனை கடந்த பிறகு கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆகாஷ் தீப் அடித்த சிக்ஸர், ஆஸ்திரேலிய அணிக்கு பேரிடியாகவே அமைந்தது.
ஆகாஷ் தீப் அடித்த அந்த சிக்ஸரை விராட் கோலியே வாயைப் பிளந்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோரின் பந்துவீச்சை ஆகாஷ் தீப் எதிர்கொண்டு ஆடிய பேட்டிங்கைப் பார்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.
தனது பேட்டிங் திறமையால் ஆகாஷ் தீப் தற்போது ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றியை பறித்துள்ளார். நாளை கடைசிநாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டியில் இரு அணிகளுமே இன்னும் பேட்டிங் செய்ய வேண்டியிருப்பதால் இந்த போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது. இந்திய அணியை பாலோ ஆன் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணிய ஆஸ்திரேலியாவிற்கு ஆகாஷ் தீப் மிகப்பெரிய பேரிடியை உருவாக்கியுள்ளார்.














