நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தாண்டு மற்ற சீசன்களை காட்டிலும் மிகவும் விறுவிறுப்பான தொடராக அமைந்துள்ளது. இன்றைய சூழலில், மிகவும் முக்கியமான ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டம் அமைந்தது.
ப்ளே ஆஃப் பரபரப்பு:
முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகள் தோல்வி அடைந்த பெங்களூர் அணியின் கதை முடிந்துவிட்டது. இதற்கு பிறகு ப்ளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று அனைவரும் விமர்சித்த நிலையில் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மழை, குறிப்பிட்ட ரன் விகித வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றது.
இந்த சூழலில், இன்றைய போட்டி நடைபெறுமா? நடக்காதா? என்ற நெருக்கடியில் குறிப்பிட்ட ரன் விகித வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும், குறிப்பிட்ட ஓவர்களுக்குள் சேஸ் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய பெங்களூர் அணியை தொடக்கத்தில் மழை மிரட்டியது.
மிரட்டிய சென்னை:
பின்னர், கோலி அதிரடியாக ஆட மறுமுனையில் பாப் டுப்ளிசிஸ் மிரட்ட ரன் எகிறியது. பின்னர் வந்த படிதார், கிரீன், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து மிரட்ட 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடலாம் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. பெங்களூர் மைதானத்தில் நல்ல தரவுகளை வைத்துள்ள சென்னை அணிக்கு முதல் பந்திலேயே ருதுராஜ் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல்லையும் யஷ் தயாள் அவுட்டாக்க, ரஹானே – ரவீந்திரா ஜோடி மிரட்டினர்.
சிறப்பாக ஆடிய ரஹானே பெர்குசன் பந்தில் 33 ரன்களில் அவுட்டாக, அவுட்டாக, மறுமுனையில் ரவீந்திரா மிரட்டிக் கொண்டிருந்தார், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ரவீந்திரா 13வது ஓவரில் ரன் அவுட்டானார். அவர் 67 ரன்களை 33 பந்துகளில் எடுத்திருந்தார். சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான ஷிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
காப்பாற்றிய யஷ் தயாள்:
கடைசி கட்டத்தில் தோனி – ஜடேஜா கூட்டணி ஆர்.சி.பி. ரசிகர்களை கதிகலங்க வைத்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் ப்ளே ஆஃப் என்ற சூழல் வந்தபோது முதல் பந்தில் தோனி மைதானத்தை விட்டு வெளியே செல்லும் அளவிற்கு அடித்த சிக்ஸர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆனால், அடுத்த பந்திலே யஷ் தயாள் பந்தில் தோனி அவுட்டாக கடைசி 2 பந்தில் 10 ரன்கள் என்ற சூழல் ஏற்பட்டது.
கடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் என்ற அதே சூழலில் ஜடேஜா எதிர்கொண்டார். ஆனால், இந்த 2 பந்தையும் யஷ் தயாள் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் வீசி பெங்களூர் அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
எத்தனை அவமானங்கள், எத்தனை விமர்சனங்கள் அத்தனையும் கடந்து இன்று ஆர்.சி.பி. அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. விடாமுயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆர்.சி.பி. தலைசிறந்த உதாரணம் ஆகும்.













