தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.
தனுஷ் பற்றி சுசித்ரா:
அதில், நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, பயில்வான் ரங்கநாதன் என பலரை பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். குறிப்பாக, தனது கணவரும் நடிகருமான கார்த்திக் ஒரு தன்பாலின சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷூம் அந்த உறவில் இருந்தனர் என்றும் கூறியிருந்தார். இது கோலிவுட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. குறிப்பாக, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பயில்வான் ரங்கநாதனை பற்றியும் மிகவும் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை அவர் கூறினார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா – தனுஷ் திருமண வாழ்க்கையை பற்றியும் பேசிய சுசித்ரா, ஐஸ்வர்யா ஒரு மோசமான தாய் என்று கூறியும் விமர்சித்தார். சுசித்ராவின் கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ள நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்தினர் மிக கடுமையான மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
மன உளைச்சலில் ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் ஏற்கனவே தனது மகள் ஐஸ்வர்யா – தனுஷ் பிரிந்து இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே மன வேதனையில் இருந்து வருகிறார். தனது உடல்நலம் மட்டுமின்றி தனது குடும்ப விவகாரம் தொடர்பாகவும் அவர் அரசியலுக்கு வருவதை தவிர்த்து விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படங்கள் தோல்வி, அவரது சர்ச்சை கருத்துக்கள் என அடுத்தடுத்து ரஜினிகாந்த் மன வேதனையில் இருந்து வந்த நிலையில், தனது மகள் மற்றும் மருமகன் பற்றிய பாடகி சுசித்ராவின் கருத்து ரஜினிகாந்த் குடும்பத்தை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.














