இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி பண்டிகை உள்ளது. தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி:
தமிழ்நாட்டில் இந்த 9 நாட்களும் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவிக்கு சிறப்பு ஆராதனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட உள்ளது. இன்று தொடங்கும் இந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கும், ஆராதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 9 நாட்களுக்கும் ஈஷா யோகா மையத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒடிசா, ராஜஸ்தான், நம் தமிழ்நாட்டின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
கலைநிகழ்ச்சிகள்:
இன்று ப்ராஜெக்ட் சான்ஸ்கிரிட் திரிதேவி நடனம், நாளை சிவராஜ்ராவ் குழுவின் காவடியாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகள் யாவும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுந்த் மண்டபத்தில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் களை கட்டியுள்ளது.














