மிக சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி என்று கீழே விரிவாக காணலாம்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி – 1 கப், பால் – 2 கப், தயிர் – 1 கப், இஞ்சி – 1 இன்ச் அளவு
பச்சை மிளகாய் – 2, வெண்ணெய் – 2 ஸ்பூன், நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – சிறிதளவு, உளுந்து – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, கொத்தமல்லி இலை – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை நன்றாகக் கழுவி நன்கு வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வடித்த சாதத்தை சூடாக இருக்கும்போதே கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
இப்போது, சாதத்தை நன்கு ஆறவிட வேண்டும்.
பாலை காய்ச்சி நன்கு ஆறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் மசித்து வைத்திருக்கும் சாதத்தைச் சேர்க்க வேண்டும்.
இப்போது, அதனுடன் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலையும் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். சாதம் பாலை உறிஞ்ச ஆரம்பிக்கும். அடுத்ததாக அந்த சாதத்தில் எடுத்து வைத்திருக்கும் நெய்யைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். வெண்ணெய் சாதத்துடன் நன்கு கலந்ததும் அதில் தயிரைக் கட்டியில்லாமல் கடைந்து சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தைச் சேர்த்து கலந்து ஓரமாக வைத்து விட வேண்டும்.
இப்போது, ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு சேர்த்து பொரிந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உளுந்து மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். வறுபட்டதும் அடுப் அணைத்துவிட்டு அதில் கறிவேப்பிலை சேருங்கள். அந்த சூட்டிலேயே பொரிந்து விடும்.
தாளித்ததை எடுத்து தயிர் சாதத்தில் ஊற்றி கிளறினால் மிக சுவையான தயிர்சாதம் இருக்கும்.














